கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் பிரச்சனையும் - தீர்வும்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் பிரச்சனையும் - தீர்வும்
Dental-problem-for-women-during-pregnancy-solution


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

 ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

பல் பிரச்சனை வர என்ன காரணம்?

1. கிருமி பிரச்சனை.
2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

1. பால்.
2. பாலாடைக்கட்டி.
3. இனிப்பு இல்லாத தயிர்.
4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

1. பாலாடைக்கட்டி
2. செறிவூட்டிய வெண்ணெய்.
3. சால்மன் போன்ற மீன்.
4. முட்டை. 

குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் - Children Need Education Freedom

குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் - Children Need Education Freedom


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குழந்தை பிறந்ததும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், வக்கீல் என்று தாமே குழந்தை என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.

குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.

கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.

பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.

குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

நம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா?

அறிஞர்களில் ஜிப்ரான் சொல்வது போல, ‘நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போல அவர் களை ஆக்க முயலாதே’ என்பார்.

பள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப்பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது? என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒரு சில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.

படிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.

கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.

காந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

முக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.

இன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.

இந்த நொறுக்குத்தீனிகள் (Junk Food) குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும்

இந்த நொறுக்குத்தீனிகள் (Junk Food) குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும்
junk-food-effects-on-children-health


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!


* PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.

* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!

* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..

* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.

உடலில் வரும் சூட்டு கொப்புளம் (Heat Blister)- தீர்வு தரும் கைவைத்தியம்

உடலில் வரும் சூட்டு கொப்புளம் (Heat Blister)- தீர்வு தரும் கைவைத்தியம்
heat-Blisters-on-body-Self-medication


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது.

நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. கொப்பளங்களைப் போக்க பல எளிய தீர்வுகள் இருந்தாலும், அவை உடலில் ஏற்படத் தொடங்கும்போதே அதற்கான சிகிச்சையை பின்பற்றி அவற்றைப் போக்குவது நல்லது.

சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம். கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பது கொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது.

வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம். ஆகவே அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி குறைந்து சீழ் கட்டாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் தருவதால், சீழ் கட்டியாக மாறாமல், எளிதில் தடிப்பு கரைந்து விடலாம்.

கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். முன்கூட்டியே கட்டிகள் கண்டறியப்பட்டால், இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யலாம். கொப்பளங்களுக்கு அதன் தீவிர தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படலாம்.

வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் வெந்நீர் ஒத்தடம் நல்ல தீர்வைத் தரும். பெரிதாக வளர்ந்த கொப்பளங்களைப் போக்க நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட ஒத்தடம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நல்ல பலனத் தரும். சூடு ஒத்தடம் தருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டம் அதிகரித்து விரைந்து காயங்கள் குணமடைகிறது. சூடு ஒத்தடத்தை சரியான வழியில் பின்பற்றினால் ஆச்சர்யமான விளைவுகளைக் காண முடியும்.

டீ ட்ரி ஆயில் டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றின் கிருமி எதிர்ப்பு தன்மை காரணமாக கொப்பளங்கள் எளிதில் குணமாக முடியும். மஞ்சள் மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் கொப்பளங்களைப் போக்க சிறந்த தீர்வைத் தருகிறது. மஞ்சளை சருமத்தின் மேல்புறமாக தடவலாம் அல்லது மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை. கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக, சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள். இந்த சிகிச்சையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை சேர்த்து அளிப்பதால், வலி குறைந்து தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. கொப்பளத்தின் நிலையை அறிந்து தீவிரத்தை உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. 

Dog Smiling and Dog Warning'

Dog Smiling and Dog Warning'
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



Dog Smiling and Dog Warning'

English Learning - Polite and Diplomatic Language

English Learning - Polite and Diplomatic Language
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



English Learning - Polite and Diplomatic Language

Cooking English Phrases

Cooking English Phrases
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



Cooking English Phrases 

கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை - Hand Beauty Tips

கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை - Hand-Beauty-tips

சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை - Hand-Beauty-tips

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..

சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும். அதற்கு ஒருசில பழக்க வழக்கங்களும் காரணம். சாப்பிடுவதற்கு முன்பும், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவது அவசியமானது.

சிலர் கை களை கழுவுவதற்கு துணிகளுக்கு சலவை செய்யும் சோப்பை பயன்படுத்துவார்கள். அவரவர் சருமத்திற்கு பொருத்தமான வீரியம் குறைந்த குளியல் சோப்பை பயன்படுத்த வேண்டும். சருமத்தை போலவே கைகளும் ஈரப்பதம் கொண்டிருக்க வேண்டும். கைகளின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதே வேளையில் கைகளை கழுவியதும் நன்றாக உலர்த்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வருவது கைகளை மென்மையாக்குவதோடு வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்கும்.

வெளியில் செல்லும்போது கைகளில் சன் ஸ்கிரீன் பூசிக்கொள்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதோடு இளமைப்பொலிவையும் தக்க வைக்க உதவும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கைகளில் எண்ணெய் தடவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அது சருமத்தில் ஊடுருவி, உலர்வடையாமல் பார்த்துக்கொள்ளும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை அதற்கு ஏற்றது.

ஸ்வஸ்திகாசனம் - Swastikasana

ஸ்வஸ்திகாசனம் - Swastikasana

மூட்டு வலி, கால் வலியை குணமாக்கும் ஸ்வஸ்திகாசனம்

''ஸ்வஸ்திகா'' என்றால் வளமையான அல்லது வளம் பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர் பெற்றது.

ஸ்வஸ்திகாசனம் - Swastikasana


           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



ஸ்வஸ்திகாசனம்
''ஸ்வஸ்திகா'' என்றால் வளமையான அல்லது வளம் பொருந்திய என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ''ஸ்வஸ்திகாசனம்'' எனப் பெயர் பெற்றது.

பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இருபாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.

செய்முறை :

முதலில் விரிப்பில் உட்க்கார்ந்து இரண்டுகால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள். வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.

கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும். 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.

பயன்கள் :

முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். நுரையீரல் வளம் பெரும். மனது அமைதி பெறும். தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது.

பிராணாயாமம் - Pranayama

பிராணாயாமம் - Pranayama

அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிராணாயாமம்

பிராணாயாமம் - Pranayama 
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை தான் பிராணாயாமம்.

பிராணாயாமம்
ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை. இப்பயிற்சி ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கும் திறன் படைத்தது.

மூச்சுக்காற்றிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவர் பயம்கொள்ளும் போது மூச்சுக்காற்று தடைபடும். மனது சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனப்படுவதை கணலாம். மனதில் பயஎண்ணங்கள் வரும்போது கீழ்மூச்சு,மேல்மூச்சு ஏற்படுவதை காணலாம். வாழ்க்கையில் சலிப்படையும் போதோ அல்லது மனதில் பொறாமை எண்ணம் ஏற்பட்டாலோ ''பெருமூச்சு'' விடுவதை காணலாம்.

இதயநோய் உள்ளவர்கள் மனதில் அதிகளவு சந்தோஷப்படுவதோ, துக்கப்படுவதோ கூடாது என்பார்கள். ஏனெனில் இந்த அதிகப்படியான மன உணர்ச்சிகள் மூச்சுக்காற்றில் தடையை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால்.

ஆக மனதில் ஏற்படும் எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

மன எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது எனில் அதே மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துவத்தின்மூலம் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா? ஆம் ...முடியும் என்றுதான் தோன்றுகிறது.

அப்படியெனில் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்தி அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி ஆசையினாலும், காமத்தினாலும், பொறாமையினாலும் அலைபாயும் மனதை எளிதாக கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவதே பிரணாயாமம்.

பிராணாயாமம் அதற்கான விதிமுறைகளின்படி மிக கவனமாக பயிற்சி எடுக்கவேண்டும். தவறினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முறையாக நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் பயிற்சி எடுப்பதே சிறப்பு.

பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க - Kids Teeth Care

பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க - Kids Teeth Care

குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது.

பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க - Kids Teeth Care


           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க...
நமது உடல் ஆரோக்கியமும், பற்களின் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டது. பற்கள், ஈறுகள் மற்றும் வாய் பகுதி ஆரோக்கியமாக இருந்தால்தான், உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பற்களை பராமரிப்பது எளிதானது. ஆனால் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றாற்போல் பற்களை பராமரிக்கும் விதமும் மாறுபடும்.

தாய் கருவுற்ற ஆறாம் வாரத்திலேயே கருவில் வளரும் குழந்தைக்கு பற்கள் முளைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட தொடங்கிவிடும். அந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சேர்த்துக்கொண்டால் பின்னாளில் குழந்தையின் பற்கள் வலிமையாக இருக்கும்.

குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் இனிப்பு பலகாரங்களை அதிகம் உண்பதால்தான் பற்சிதைவு ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. சில சமயங்களில் குழந்தைகள் பால் அருந்தியவுடன் அப்படியே தூங்கிவிடுகிறார்கள். பல குழந்தைகள் புட்டிப்பாலை அருந்தியபடியே தூங்கவும் செய்கிறார்கள். குழந்தை பருவத்தை கடந்ததும், கடைகளில் வாங்கும் பாலுடன் சர்க்கரையை கலந்து பருகுகிறார்கள். அப்போது பால், பற்களில் ஒட்டிக்கொள்ளும். அதனால் பாலின் வாயிலாகவும் பற்சிதைவு ஏற்படுகிறது.

அதை தடுக்க பால் குடித்த பின்பு மெல்லிய துணியை கொண்டோ, மிருதுவான பிரஷை கொண்டோ குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு எச்சிலை உமிழத்தெரியாதவரை பற்பசையையோ, பற்பொடியையோ பயன்படுத்தக்கூடாது. பெற்றோரும், வீட்டு பெரியவர்களும் வாய் சுகாதாரத்தை பேணுவதும் அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் மூலம் குழந்தை களுக்கு பாதிப்பு நேரும். தொடும் போதும், முத்தம் கொடுக்கும்போதும், குழந்தைக்கு நோய் தொற்றுகள், தோல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, குழந்தைகள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கவனமுடன் செயல்படவேண்டும்.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பற்பசை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதனை கொண்டு குழந்தைகள் தாங்களாகவே பற்களை துலக்குவதற்கும் பழக்க வேண்டும். சத்தான உணவு வகைகளையும் சாப்பிட கொடுக்க வேண்டும். அதன் மூலம் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் பற்களும் சிறுவயது முதலே ஆரோக்கியமாக இருக்கும். அடிக்கடி வாய் கொப்பளிப்பதும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைக்காட்டிலும் தாங்கள் அதன் படியே நடக்க வேண்டும். அதை பின்பற்றி குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு 7 வயது முதல் 12 வயது வரை பால் பற்களும், நிலையான பற்களும் சேர்ந்தே இருக்கும். இந்த சமயத்தில் பற்சிதைவு பிரச்சினை ஏற்படும். அதோடு முகத்தில் தாடை எலும்புகள் வளர்ச்சி பெறுவதால், பல்வரிசை சரியாக அமைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே, வரும் முன் காப்பதே சால சிறந்தது என்பதற்கிணங்க, பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வதுதான் மிகவும் நல்லது.

பதின் பருவத்திலிருந்து பற்களை சரியாக பராமரிப்பதும், காலை மற்றும் இரவு படுக்கபோகும் முன்பு பல் துலக்குவதும் பற்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பற்சிதைவு ஏற்படாமலும் பாதுகாக்கும்.

பெரியவர்களான பின்பு புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், புகையிலை போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பல்கூச்சம், எரிச்சல், பற்சிதைவு, ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் நேர்ந்தால் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். இன்றைய நவீன மருத்துவத்தில் வேர் சிகிச்சை உள்ளிட்ட நுட்பமான சிகிச்சை முறைகள் மூலம் எளிமையாக தீர்வு கண்டுவிடலாம்.

வாயில் பற்கள் முளைத்த நாள் முதல் தொடர்ந்து பற்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்துமே பற்களை கடந்துதான் உள்ளே செல்கிறது. பெரும்பாலும் உணவு பொருட்களை பற்களால் மென்றுதான் விழுங்குகிறோம். அப்போது பற்களில் உணவு துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதனை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருந்துவிட்டால் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். சரியான முறையில் பற்களை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் (பற்சிப்பி) தேய்ந்து, பற்கள் கூர்மையாகி வாயின் உள் பகுதியை ரணமாக்கிவிடும். அதுவே வாயில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிவிடும். ஆதலால் பற்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

பற்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பளிச்சென்ற பற்களும், அழகான புன்னகையும், அன்பான வார்த்தைகளும் நம்மை மற்றவர்கள் மத்தியில் உயர்வாக அடையாளம் காட்டுகிறது. தன்னம்பிக்கையும் அளிக்கிறது. அத்தகைய அழகான பற்களையும், ஈறுகளையும் வாய் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்போம். நிம்மதியாக புன்னகை பூப்போம்.

பித்தக்கற்கள் - Gallbladder-stones -காரணங்களும் - சிகிச்சை முறையும்

பித்தக்கற்கள் - Gallbladder-stones -காரணங்களும் - சிகிச்சை முறையும்

பித்தப்பை கற்களை உடையவர்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி வலியில் வதங்கி வாட வேண்டிய தேவை இல்லை. நவீன 3டி லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.


பித்தக்கற்கள் - Gallbladder-stones -காரணங்களும் - சிகிச்சை முறையும்

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

பித்தக்கற்கள்
பித்த நீர் மஞ்சள் நிறமானது. அதற்கு காரணம் அதில் உள்ள பிலுருபின் என்ற நிறமியாகும். இந்த பிலுரு பின் இரத்தத்தில் அதிகமாக சுரப்பதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் ஏற்படுகிறது. பித்தப்பை சாப்பிடுவதற்கு முன் பெரிதாக இருக்கும்.

சாப்பிட்ட பின் சிறிதாகி விடும். ஏனெனில் அதில் உள்ள பித்த நீர் எல்லாம் உணவு செரிப்பதற்காக குடலுக்கு வந்து விடும். பித்தப்பையில் கல் இருந்தால் இவ் வாறு செயல்படுவது இயலாது.

பித்தக்கற்கள் உண்டாக காரணங்கள்

1 வார்டு மாயினிஹான் கூற்றிற்கு ஏற்ற வண்ணம் பித்தக்குழாயிலும் பித்தப் பையிலும் ஏற்படும் நோய் கிருமிகளின் தாக்குதல்களாலும் வேதியியல் மாற்றங்களாலும் பித்தக் குழாய்களில் கற்கள் உண்டாகி பித்த நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றது.

பித்தப்பை கற்களின் அறிகுறிகள்

1. வயிற்றின் வலப்புறமாக வலி ஏற்படும். இவ்வலி வலது தோளுக்கோ அல்லது வலது விலாவின் பின்புறமாகவோ பரவலாம்.

2. கொழுப்பு நிறைந்த ஆகாஇஇரத்தின் போது இந்த வலி அதிகப்படும்.

3. ஆகாரம் நன்கு செரிக்கா மல் உப்பிடும் என்னும் மந்தநிலை ஏற்படுதல்.

4. வாந்தி காய்ச்சல் முதலிய நோய்களும் உண்டாகும்.

சிகிச்சையின் நன்மைகள்

1. மிக நுண்ணிய துளைகளின் மூலம் சிகிச்சை செய்யப்படுவ தால் தழும்பு களும் தைலும் இல்லை.

2. இரத்த இழப்பு இல்லை.

3. ஒரு சிறிய துளையின் வழியே வயிற்றின் உட்பகுதி யில் வேறு ஏதேனும் நோய் உள்ளதா என அறிய முடியும். மேலும் அதற்கு தேவையான நிவர்த்தியும் செய்யலாம்.

ஆகவே பித்தப்பை கற்களை உடையவர்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி வலியில் வதங்கி வாட வேண்டிய தேவை இல்லை. நவீன 3டி லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

அஜீரணம் - Indigestion குறித்து ஆயுர்வேதம் கூறுவது

அஜீரணம் - Indigestion குறித்து ஆயுர்வேதம் கூறுவது
What-does-Ayurveda-say-about-indigestion

ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

அஜீரணம் - Indigestion குறித்து ஆயுர்வேதம் கூறுவது

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் கூறுவது
ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய உணவு எல்லா தோ‌‌ஷங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது. இதனால் பல விதமான வயிற்று நோய்கள் உருவாகின்றன. அஜீரண நோய் உள்ளவர்கள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

அஜீரணத்தால் மலம், சிறுநீர் கழிப்பதில் தடை, குடல் வாட்டம், அபான வாயு தடை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படலாம். கோபம், மனத்துயரம் போன்றவற்றாலும் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. பத்தியமான உணவுடன் அபத்தியமான உணவைச் சேர்த்துச் சாப்பிடுவது சமாசனம் என்றும், உணவைச் சாப்பிட்ட உடன் மறுபடியும் சாப்பிடுவது அத்யசனம் என்றும், அகாலத்தில் அதிக அளவு அல்லது குறைந்த அளவு சாப்பிடுவது வி‌‌ஷமாசனம் என்றும் இந்த மூன்று வகைகளும் கொடியவை என்றும், நோயை உருவாக்கக்கூடியவை என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.


சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக் கீரை, இளம் முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் போன்றவற்றை முதலில் சாப்பிட வேண்டும். புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளவற்றைக் கடைசியில் சாப்பிட வேண்டும். இரைப்பையின் பாதி அளவு திட உணவும், கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டுவிட வேண்டும்.

ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதும், அது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், எல்லா கலாசாரத்திலும், எல்லா நாட்டிலும் பொதுவாகக் காணப்படும் கொள்கை. உணவானது மனதுக்கு நிறைவையும், சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும்படி இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக 2000 கலோரி அளவு தேவைப்படுகிறது. கலோரி என்பது உடலுக்குத் தேவையான சக்தி தான். இதைப் பெறுவதற்கு பல விதமான உணவு வகைகளை, தானியங்களை, பழங்களைக் கலந்து சாப்பிட வேண்டும்.

ஓட்டல்களில் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பழங்களையும், பருப்பு வகைகளையும், நார்ச்சத்துள்ள உணவு வகைகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உப்பை குறைத்துச் சாப்பிட வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2.5 கிராம் முதல் 3 கிராம் உப்பு போதுமானது. உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது, உடம்புக்கு அசைவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது மனப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவு உணவை, பல தடவைகளாகச் சாப்பிடுவது இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

கொசு கடித்தால் என்ன செய்யலாம் - Mosquito Bites

கொசு கடித்தால் என்ன செய்யலாம் - Mosquito Bites

கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும். இதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.


கொசு கடித்தால் என்ன செய்யலாம் - Mosquito Bites

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753




கொசு கடித்தால் என்ன செய்யலாம்...
கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும். அந்த இடத்தில் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோல் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கொசு கடித்தால் ஏற்படும் சிவப்பு தழும்பை போக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. வாழைப்பழ தோலின் உள்பகுதியில் இருக்கும் இழைகளை தனியாக எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழைத்து கொசு கடித்த இடத்தில் பூச வேண்டும். பின்னர் அதன் மேல் ஐஸ் கியூப்பை வைத்து பருத்தி துணியால் கட்டவேண்டும். கால் மணி நேரம் கழித்து கழற்றி விடலாம்.

கொசுக்கடிக்கு வெள்ளரிக்காயையும் உபயோகப்படுத்தலாம். அதற்கும் சரும அரிப்பை போக்கும் தன்மை உண்டு. வாழைப்பழ தோல் மசியலுடன் சிறிதளவு வெள்ளரிக்காயையும் மசித்து அதனை கொசு கடித்த இடத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பின்பு அதனை துடைக்கக்கூடாது.


வாழைப்பழத்தோலுடன் கிளிசரினையும் பயன்படுத்தலாம். வாழைப்பழ தோல் மசியலுடன் சில துளி கிளிசரின் சேர்த்து கொசு கடித்த இடத்தில் பூசி அரை மணி நேரம் வரை உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தாய்மார்களே - மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள்

தாய்மார்களே - மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள்
mother-teenage-daughter-understanding



           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


தாய்மார்களே - மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள்

தாய்மார்களே பள்ளி மாணவிகளான உங்கள் மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள். அவர்களுடன் தினமும் சிறிது நேரம் மனவிட்டு பேசுங்கள்

படிக்கும் பெண் பிள்ளைகளின் மனநிலை
வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி, பிரபலமான பள்ளிக்கூடம் ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளது மூத்த சகோதரி வெளிநாட்டில் படிக்கிறாள். பெற்றோர் தொழிலதிபர்கள். பள்ளி மாணவியான அவள் கனமான உடல்வாகு கொண்டவள். வயதை மீறிய உடல்வளர்ச்சியுடன் தோன்றியதால், அவள் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காக ‘ஜிம்’ ஒன்றிற்கு உடற்பயிற்சிக்காக அனுப்பினார்கள். அவளும் ஆர்வமாக சென்றுகொண்டிருந்தாள்.

பயிற்சிக்கு பின்பு உடல் எடை குறைய ஆரம்பித்தது. அது அவளுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு அவள் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினாள். கலைநிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றாள். மகளிடம் ஏற்பட்ட மாற்றங்களால் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள்.


அவளது வீட்டில் உணவு விஷயத்தில் மிகுந்த ஆரோக்கிய முறைகளை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் நகரத்தில் வசித்தாலும், சற்று தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சில ஏக்கர் நிலத்தை வாங்கி, ஆட்களை ஏற்பாடு செய்து அதில் இயற்கை விவசாயம் செய்தார்கள். அங்கு விளையும் உணவுப் பொருட்களைதான் தங்கள் வீட்டின் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தாயார், மகளிடம் உணவு விஷயத்தில் மிகுந்த கண்டிப்பு காட்டினார். தோழிகளோடு சேர்ந்து வெளியே சென்று சாப்பிட அவளை அனுமதிப்பதில்லை. எந்த உணவு தேவை என்றாலும் உடனே வீட்டில் அதை சமைத்து வழங்க ஏற்பாடு செய்துவிடுவார். ஆனால் அவளோ தன் தோழிகள் சிலரை போன்று கண்டதையும் வாங்கி சாப்பிடவிரும்பினாள். தாயார் தன்னை அதற்கு அனுமதிக்காதது அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இரண்டு மூன்று மாதங்களில் திடீரென்று மீண்டும் அவள் உடல் குண்டாகத் தொடங்கியது. தாயாருக்கு அதற்கான காரணம் புரியவில்லை. வீட்டில் சமையல் செய்யும் பெண்ணிடம் விசாரித்தபோது ‘அவள் இப்போதெல்லாம் விதவிதமான உணவுகளை தயாரித்து கேட்பதாகவும், பெரும்பாலான நேரம் வீட்டில் தனிமையில் இருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பதாகவும்’ சொன்னாள்.

அதை கண்காணித்த தாயார், மகள் சாப்பிடும் உணவுகளின் அளவைப் பார்த்து பிரமித்து போனார். அவளது இயல்பான உணவுப் பழக்கம் அது இல்லை என்பதால், மகளின் சுபாவத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் அவளது தமிழாசிரியையிடமிருந்து, தாயாருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்புவந்தது. ‘உங்கள் மகள் விஷயமாக பேசவேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் தனியாக வந்து என்னை சந்தியுங்கள்’ என்றார்.

கலக்கத்தோடு சென்ற தாயார் தமிழாசிரியையை சந்திக்க, அவர் ‘உங்கள் மகள் வகுப்பில் பெஞ்சின் கீழே அமர்ந்து ஒளிந்திருந்து அழுதுகொண்டிருந்திருக்கிறாள். அதை பார்த்து பயந்துபோன தோழிகள் என்னிடம் வந்து சொன்னார்கள். நான் அவளை அழைத்து பேசிப்பார்த்தேன். என்னிடமும் அழத்தான் செய்கிறாள். உண்மையை சொல்ல மறுக்கிறாள். அவள் விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்துகொண்டிருக்கிறது. அது என்னவென்று உடனடியாக கண்டுபிடியுங்கள்’ என்றார்.

தாயார் அதிர்ந்துபோய் நடந்ததை கணவரிடம் கூற, இருவரும் சேர்ந்து காரணத்தை கண்டறிய வலைவிரித்தார்கள். அந்த வலையில், பள்ளிக்கு அருகில் ரோட்டில்வைத்து மாங்காய்களை கீறிவிற்கும் நடுத்தர வயது நபரும், அதில் இருந்து சற்று தூரத்தில் காரில் உட்கார்ந்திருந்த இளைஞரும் சிக்கினார்கள்.

அந்த நபர் மாங்காயில் மிளகாய்த்தூள் கலந்து விற்பதை வாங்கி சாப்பிட அவள் ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் ரோட்டில்வைத்து சாப்பிட்டால், அதை யாராவது பார்த்து தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவார்களோ என்று பயந்திருக்கிறாள். அவளது பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாங்காய் வியாபாரி, அங்கே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் உட்கார்ந்து சாப்பிடும்படி வற்புறுத்தியிருக்கிறார். காரில் சன்பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் இளைஞன்தான் அந்த காரின் உரிமையாளன். ‘பயப்படாமல் காரில் உட்கார்ந்து சாப்பிடு’ என்ற அவன், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காரோடு அங்கு காத்திருந்து, அவள் மாங்காய் சாப்பிட உதவி செய்து அவளோடு நட்பை வலுப்படுத்தியிருக்கிறான். பின்பு மிரட்டி காருக்குள்வைத்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறான்.

அதில் இருந்து தப்பும் வழி அவளுக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை அவளால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அதனால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளாள். அந்த மனஅழுத்தமே அவள் அளவுக்கு அதிகமாக உணவு உண்ணவும், வகுப்பறையில் அழவும் காரணமாக இருந்திருக்கிறது.

இப்போது அந்த குற்றவாளிகள் இருவரும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தாய்மார்களே பள்ளி மாணவிகளான உங்கள் மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள்!

Yoga for Shaped and Fit Body

Yoga for Shaped and Fit Body
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



Yoga for Shaped and Fit Body

Lose Thigh Fat and Get Slim Toned Legs

Lose Thigh Fat and Get Slim Toned Legs
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



Lose Thigh Fat and Get Slim Toned Legs