குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் உணவுகள்

 குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் உணவுகள்



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில குழந்தைகளுக்கு சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இதை ‘ஒவ்வாமை’ என்று சொல்கின்றனர். இந்த ஒவ்வாமையால் பல உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ என்ற சத்து சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பால் கொடுத்தால், அது குழந்தைக்கு செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாலுக்குப் பதிலாக பால் பவுடர், பிற உணவுகளைத் தரலாம். ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவு தர வேண்டும். சில குழந்தைகளுக்கு சில திட உணவுகள் ஒத்துக்கொள்ளாது. 5% குழந்தைகளுக்கு இப்படி அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு.


எந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும்?

நிலக்கடலை
சோயாபீன்ஸ்
கடுகு
சில கொட்டை வகைகள்
பால்
மீன்
முட்டை
சில தானிய வகைகள் - கோதுமை போன்றவை
எலுமிச்சை

மேற்சொன்ன உணவுகளில் உள்ள புரதமோ மற்ற பொருட்களோ அலர்ஜிக்கு காரணமாகலாம்.



அலர்ஜி வரும் அறிகுறிகள் என்ன?

வயிற்றுப்போக்கு
வாந்தி
வயிற்று வலி
மூச்சுத்திணறல்
மயக்கம்
தொண்டைப் பகுதியில் வீக்கம்
மூக்கிலிருந்து நீர் வழிதல்
தோல் சிவந்து போதல், தடிப்பு, அரிப்பு
நாக்கு, உதடு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல்
உடலெங்கும் குத்தும் உணர்வு
தலைச்சுற்றல்

தடுக்கும் முறைகள்

மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து முறையான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

தடுப்பு மருந்துகள், அலர்ஜி மருந்துகள் ஆகியன மருத்துவர் பரிந்துரைத்தால் அதை அவசியம் சாப்பிட வேண்டும்.

6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் 3-நாள் விதிமுறையைப் பின்பற்றுதல் நல்லது.

ஒரு உணவை சிறிதளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, குழந்தை அதை உண்ட பிறகு 3 நாள் வரை குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். அலர்ஜி ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொள்கிறது என அர்த்தம்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை எக்காலத்துக்கு எக்காரணத்துக்கும் குழந்தைகளுக்கு திரும்ப தர கூடாது.

குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?

குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?

children-anger-how-to-control.



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

SHARE MARKET TRAINING

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? அப்ப கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...


உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...


* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.



குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...


* பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.


* விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.


* சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.


* நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.


* வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.


* மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும். 

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குழந்தைகள் பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.


1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…

* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

* குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.

* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.

* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். 

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை
children-Pranks-parents-how-to-handle.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. குழந்தைகளின் சேட்டையை இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ…

இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.


குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.

குழந்தைகள் மரம் செடி கொடிகளோடு மனம்விட்டுப் பேசட்டும்.

குழந்தைகள் மரம் செடி கொடிகளோடு மனம்விட்டுப் பேசட்டும்.
children-talk-with-Trees

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும்.

குழந்தைகள் இன்பமாக வளர என்ன செய்யவேண்டும்? அவர்களை இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும்.

பூமி செழித்தால்தான் மனித வாழ்க்கை செழிக்கும். பூமி செழிக்கவேண்டும் என்றால், இயற்கையை குழந்தைகள் நேசிக்கும் அளவுக்கு அவர்களை பழக்கவேண்டும். குழந்தைகள் இயற்கையை நேசித்தால் அது அவர்களது வாழ்க்கையை சுவாரசியமாக்கும்... சுகமாக்கும்..! அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாகவும் வளர்வார்கள்.


இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம், தூய்மை போன்ற நல்ல பழக்கங்கள் உருவாகும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தோன்றும். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலும் உருவாகிறது. அது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு சிறப்பாக கைகொடுக்கும்.

டி.வி.யில் ஒளிபரப்பாகும் சோப்பு விளம்பரம் ஒன்றில் நாலைந்து குழந்தைகள் ஒருங்கிணைந்து இன்னொருவர் வீட்டை சுத்தப் படுத்துவார்கள். அதனை மற்ற குழந்தைகள் டி.வி.யில் பார்க்கும்போது அவர்களது சிந்தனை வளப்படும். சுத்தம், சுகாதாரம், ஒருங்கிணைந்து பணியாற்றுதல், அடுத்தவர்களுக்கு உதவுதல் போன்றவைகளின் சிறப்புகளை அதன் மூலம் உணர்வார்கள். அதுபோல் இயற்கையை மேம்படுத்தவும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரு செடியை நட்டு வளர்க்கக்கூட குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருங்கிணைய வேண்டியதிருக்கும். அதனால்தான் இப்போது சில பள்ளிகளில் குழந்தைகளை குழுகுழுவாக பிரித்து, அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக்கொடுத்து, ஒருங்கிணைந்து செடி, கொடிகளை வளர்க்கத் தூண்டுகிறார்கள்.

இந்த பூமி நாம் வாழும் இடம். எதிர்காலத்தில் நமது சந்ததிகளும் வாழவேண்டிய இடம். இதனை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு. ஆனால் அதை உணர்ந்து கொள்ளாதவர்களாகத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நிறைய பேர் ‘யூஸ் அன்ட் த்ரோ’ பொருட்களை பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு, அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். அதன் மூலம் இந்த பூமி எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா! யூஸ் அன்ட் த்ரோ பொருட்கள் அதிகம் உருவாகாத பழைய காலத்தில் மனிதர்கள் இயற்கை சூழல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

அவர்களை சுற்றி மரம், செடி, கொடிகள், மலைகள், குளங்கள், ஏரிகள் இருந்தன. இன்று நாமே அவைகளை புறக்கணித்து அழித்துக் கொண்டிருக்கிறோம். மரம், செடி, கொடிகளை ஏதோ கண்காட்சியில் வைப்பது போல் நாம் வீட்டில் சிறு தொட்டிகளில் வைத்து பராமரிக்கிறோம். அதனால் தாவர இனங்கள் மட்டுமல்ல, பறவை இனங்களும் அழிந்துவிட்டன. நம்மை வாழவைப்பது பசுமையான இயற்கைதான். ஆனால் நாம் இயற்கையை வாழ விடுவதில்லை.

அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை. சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மேன்மையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நம்மை சுற்றியிருக்கும் தாவரங்கள் நம் நண்பர்கள். அவைகளை நாம் நேசிக்க வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் சுற்றுப்புற தூய்மையையும் பாதுகாக்கவேண்டும். வீட்டிலுள்ள குப்பைகளை பொறுக்கி சுத்தப்படுத்தவும், பொருட்களை துடைத்து தூய்மைபடுத்தவும் கற்றுத்தர வேண்டும். வீட்டு சுத்தம் குடும்ப நலனைக்காக்கும். சுற்றுப்புற சுத்தம் நாட்டைக்காக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

பூமியின் நீர் வளங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்து பள்ளிக்கு செல்லவும், கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லவும் பழக்கப் படுத்திட வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி பெறுவார்கள். அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் ஏற்படும் பயன்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். தனி மனிதனுக்கு இயற்கை எவ்வளவு அரிய கொடைகளை வழங்குகிறது என்பதை குழந்தைகள் உணரும்படி செய்யவேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே அவர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக் கொண்டால், அதை பாதுகாக்கும் திறன் தானே வந்து விடும். அதுவே அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிவிடும். இந்த உலகில் நம்மைத் தவிர மற்றவர்களும் வாழ்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். மற்ற உயிர்களை அழிக்கவோ, புகலிடங்களை சிதைக்கவோ நமக்கு எந்த உரிமையுமில்லை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும்.

நாளைய தலைமுறை நலமுடன் இருக்க, இன்று நாம் செய்யும் தவறுகளை நமது குழந்தைகள் செய்யாமல் இருக்கவேண்டும். அதுவே நாம் இந்த பூமிக்கு செய்யும் பெரிய நன்றிக்கடனாக இருக்கும். மண் வளம் காக்கவும், உயிர்களை நேசிக்கவும், பயிர் பச்சைகளை வளர்க்கவும் உங்கள் குழந்தைகள் கற்று, இயற்கையோடு இணைந்து வாழட்டும்! அந்த வாழ்க்கை இனிமையாக அமையட்டும்!

வீடுகளில் நமது குழந்தைகளுக்காக எத்தனையோ செல்வங்களை சேர்த்துவைத்தாலும், அத்தனையிலும் சிறந்தது இயற்கை செல்வம். குழந்தை களுக்கு அடிப்படை தேவையான அதனை அழித்துவிட்டு, பணத்தை சேர்த்துவைத்து எந்த பலனும் இல்லை. அதனால் மரம், செடி, கொடிகளை வளர்ப்பதில் முதலில் பெற்றோர் ஈடுபடவேண்டும். குழந்தை களையும் அதில் ஊக்கப்படுத்தவேண்டும்.

மரக் கன்றுகளை நடவும், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பழக்குங்கள். நாளுக்கு நாள் அது வளர்ந்து பூப்பூத்து குலுங்குவதைப் பார்த்து அவர்களுக்கு உண்டாகும் ஆனந்தத்தை அனுபவிக்கச் செய்யுங்கள். இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துங்கள். தோட்டத்தில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை கையில் பிடித்து விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கு வண்ணத்துப் பூச்சியின் சிறப்பை எடுத்துக் கூறி அவைகளை பாதுகாக்க சொல்லிக் கொடுங்கள்.

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்?

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்?
When-can-children-start-toilet-training


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்று பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.


எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?

* கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

* ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

* அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

* குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

* குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

* தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

* சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

* இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

* குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

8 Reasons a Child Night Not be Listening

8 Reasons a Child Night Not be Listening
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

8 Reasons a Child Night Not be Listening

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

How Fit Are You ?

How Fit  Are You ?
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753

How Fit  Are You ?

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

Benefits to Different Types of Cardio

Benefits to Different Types of Cardio
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753

Benefits to Different Types of Cardio

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

Why You Need Water - Health Care

Why You Need Water - Health Care
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753

Why You Need Water - Health Care

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

குழந்தைகளின் பார்வையை பாதிக்கும் விஷயங்கள்

குழந்தைகளின் பார்வையை பாதிக்கும் விஷயங்கள்
Things-affect-children-eyes
குழந்தைகளின் பார்வையை பாதிக்கும் விஷயங்கள்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

`குழந்தைகளின் கண் பார்வையைப் பாதிப்பதில், ரசாயனப் பொருள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறு கவனமின்மை கூட குழந்தைகளின் பார்வைத்திறனை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அவர்கள்.

``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள்.


சுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள்.

கண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும்.  கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும்.

கண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.

கண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம்.

குழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய அட்வைஸ்

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய அட்வைஸ்
child-playing-cellphone-advice-for-parents.

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய அட்வைஸ்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் பிள்ளைகளுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை பெற்றோர் நெறிப்படுத்த வேண்டும்.

பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்சனை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த ஸ்டேட்டஸைப் பாருங்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன்மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச்சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

அடுத்தது, முகநூல். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

கை தவறுதலாக ஏதோ ஒன்றை டச் செய்துவிட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை ஓப்பன் செய்துவிடலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை செக் செய்வது நல்லது.

முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை, இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

முகநூலில் இருக்கிறதுபோது, அறிமுகம் இல்லாதவர்கள், இன்பாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

முகநூலில் வரும் ஆபாச வீடியோக்களை ஓப்பன் செய்தால், அது நீ அனுப்பியதாக உன்னுடைய மற்ற முகநூல் நண்பர்களுக்குச் சென்றுவிடும் என்ற தகவலைச் சொல்லி, பிள்ளைகளை உஷார்படுத்துங்கள்.

* 'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்சனை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையைப் பதியவையுங்கள்.

* உங்கள் மகளின் முகத்தை வைத்து மார்பிங் செய்வது போன்ற பிரச்சனை வந்தால், தைரியமாக சைபர் கிரைம் மூலம் தீர்வு காணுங்கள்.

கடைசியாக, ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள். 

பிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும் - அற்புத மாற்றங்களும்

பிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும் - அற்புத மாற்றங்களும்
children-5-minute-exercise-amazing-changes

பிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும் - அற்புத மாற்றங்களும்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பிள்ளைகள் சிறப்பான திறன் மேம்பாட்டை வளர்க்க தினசரி பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். தன்னம்பிக்கை வளர்த்து தங்களை உயர்த்தும்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒரு ஒழுங்கு முறையுடன் செயல்படுபவர்களுக்கு வெற்றிகள் குவியும். அவர்கள் சிறந்த மாணவராகவும், எதிர்கால தலைவராகவும் உச்சம் தொடுவது நிச்சயம். அப்படி சிறப்பான திறன் மேம்பாட்டை வளர்க்கும், தினசரி பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். தன்னம்பிக்கை வளர்த்து தங்களை உயர்த்தும் அந்த பயிற்சிகளை அறிவோமா...

சுவாசப் பயிற்சி: நமது சுவாசம் உயிர்வாழ மட்டுமல்ல உற்சாகத்திற்கும் அவசியமாகும். தூய்மையான காற்றும், அதிகமான ஆக்சிஜனும், மூளையை சுறுசுறுப்பாக்கும் மூச்சுப் பயிற்சி மூலம் காசு கொடுக்காமலே இந்த உற்சாக டானிக்கை உடலில் ஏற்றிக் கொள்ளலாம். தினசரி காலையில் எழுந்ததும் 5 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்வதை வழக்கமாக்கினால் முன்னேற்றம் தேடி வரும் என்பது முன்னோர் கூறிய அமுதவாக்காகும்

பிரச்சினையான ஒரு சூழலில், சில வினாடிகள் அமைதியாக மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மனம் தெளிவடைவதை உடனே உணரலாம். மூச்சுப் பயிற்சி செய்வதற்கு தேர்ந்த வழிமுறைகள் இருக்கின்றன. இருந்தாலும் சாதாரணமாக மூச்சை இழுத்துவிடும் முறையிலேயே பயிற்சி செய்யலாம். நீளமாக மூச்சை இழுத்து நிதானமாக வெளியிடுவதுதான் மூச்சுப் பயிற்சியின் முக்கிய அம்சம். முடிந்தால் ஒரு நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மூச்சை நீளமாக இழுத்து நிதானமாக வெளியிட்டு பழகுங்கள். அதேபோல சில முறை மறு நாசித் துவாரத்தின் வழியே பயிற்சி செய்யலாம். அமைதியான சூழலில், காற்றோட்டமான இடத்தில் இதைச் செய்தால் பலன் பெருகும். குறைந்தபட்சம் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் செய்வதால் சிறந்த முன்னேற்றம் கிடைப்பதை உடலும், மனமும் உணரத் தொடங்கும்.

பலத்தை அதிகரியுங்கள் : உடலும், மனமும் பலமாக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம். கடும் பயிற்சியால் உடலை பலப்படுத்துவதைவிட, திட சிந்தனையால் மனதை பலப்படுத்தி காரியங்களை கைகூட வைக்க முடியும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையால் மனம் உறுதி பெறும். எண்ணியன எல்லாம் ஈடேறத் தொடங்கும். முடிந்தால் உடல் வலுவையும் அதிகரித்து பலவானாகவும் திகழுங்கள்.

தினசரி மதிப்பீடு: எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாதவர்கள், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டவர்களை வெற்றி என்றும் தழுவியிருக்கிறது. நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள், மற்றவர்களுடன் இணக்கமாக செயல்படுங்கள். மற்றவர்களைவிட்டு மாறுபட்டு செயல்படுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பணிகளை திறம்பட செய்தால் வெற்றி உங்கள் வசமாவதை உணர்வீர்கள். தினசரி உங்களுக்கு நீங்களாவே சொல்லுங்கள், “நான் உயர்கிறேன், வெற்றி பெறுகிறேன்” என்று. நிச்சயம் ஓர் நாள் வெற்றி சிகரத்தின் மீது நிற்பீர்கள்!

குழந்தைகளை எப்படி படுக்க வைக்க வேண்டும்?

குழந்தைகளை எப்படி படுக்க வைக்க வேண்டும்?
Baby-Sleep-mistakes
குழந்தைகளை எப்படி படுக்க வைக்க வேண்டும்?


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.

* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.

* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.

* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.

* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.

எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்?

* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.

* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.

* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.

* பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள், பெற்றோர் தங்களுக்குள் பாலியல் ரீதியாக நெருங்குவதைப் பார்க்கும் குழந்தைகள், பாலியல் ரீதியான அசைவுகளை உணரும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கின்றனர். தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.

* அதுபோல தனியாக உறங்கும் குழந்தைகள் சற்று முரட்டுத்தனம், அதிக சுகந்திரம் படைத்தவர்களாக வளர்கிறார்கள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறனும் குறைகிறது.

Avoid Giving Mobile Gadget To Our Kids - Parental Guide

Avoid Giving Mobile Gadget To Our Kids - Parental Guide


                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753



Avoid Giving Mobile Gadget To Our Kids - Parental Guide 

One to One Share Market Training 
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி  

புளித்த ஏப்பம் எதனால்?

புளித்த ஏப்பம் எதனால்?

உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, பித்தம் மேல்முகமாக வரும் தன்மையும் அதிகரிக்கும். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவையும் காணப்படும்.
புளித்த ஏப்பம் எதனால்?


One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

புளித்த ஏப்பம்
உணவு குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தடுப்பானில் வரும் பிரச்சினையால் இப்படி ஏற்படுகிறது. உணவுக் குழாயின் கீழ் உள்ள வளையமானது மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில் இப்படி நடக்கும். இந்த தடுப்பான் பித்தம் மேலே வருவதைத் தடுக்கிறது. வயிற்றின் மேல் பகுதியை இறுக மூடி வைக்கிறது. இது சரியாக மூடும்போது பித்த ஏப்பம் அல்லது மேல்முக பித்தம் வருவதில்லை.

சில நேரங்களில் இப்படி மூடாமல் போனால் பித்தம் மேலே வருகிறது. வாயில் பித்தம் ஊறுதல், கசப்பு, வயிறு எரிச்சல், எச்சில் ஊறுதல், வாந்தி எடுக்கும் உணர்வு, நெஞ்சு வலி, இருமல் போன்றவை காணப்படும். ஒரு சிலருக்கு உணவுக் குழாயில் புண்ணும், உணவுக் குழாய் சுருங்குதலும் காணப்படும். நிறைய குழந்தைகளுக்கு இந்த நோய் உள்ளது. கண்டுபிடிப்பதற்கு சற்று சிரமமானது.

உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, பித்தம் மேல்முகமாக வரும் தன்மையும் அதிகரிக்கும். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவையும் காணப்படும். குறட்டை நோயும் வரலாம். எடை ஒரு காரணம். 50 வயதுக்கு மேல் இது வருகிறது. சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இது காணப்படுகிறது. நெஞ்சு வலி, வயிறு எரிச்சல், விழுங்குவதற்குச் சிரமம் போன்றவை இதில் காணப்படலாம்.

இதற்கு வெந்தய பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தய கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்து கடைந்து சாப்பிடலாம். அஜீரண கோளாறுகளால் குடலில் உள்ள வாயுக்கள் சீற்றம் அடைந்து குடல் சுவரைப் புண்ணாக்கி விடுகின்றன. உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து குடிக்கலாம். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும்வரை எரிக்க வேண்டும். அந்த மஞ்சள் சாம்பலை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிடலாம்.

மது, புகை மற்றும் போதை தரும் பானங்களை கண்டிப்பாக தவிர்க்கவும். அதிக காரமான உணவு வகைகளையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடக் கூடாது. அதிக நார்ச்சத்து உள்ள உணவு வகை, முழு தானிய உணவுகளைத் தவிர்க்கவும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகை, இறைச்சி, எண்ணெய் வறுவல் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

பூண்டு, இஞ்சி, காலிபிளவர், பூசணிக்காய், வெங்காயம் போன்றவற்றை கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய், நிலவேம்பு, மஞ்சள், பாதாம் பிசின், காவிக்கல், அம்மான் பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை, மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு 21 நாள் இதைச் சாப்பிடலாம்.

காலையில் இறக்கிய பதநீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் புளிக்காத எருமைத் தயிரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் என சித்த வைத்திய குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன.



அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது


One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

அம்மை நோய் அறிகுறிகள்
பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தை தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இரண்டு வகைப்படும். வெப்பத்தை தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ் வகையை சேர்ந்தது.

சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகை உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம்.

‘பாராமிக்ஸோ’ குடும்பத்தை சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடியும்.

பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்த காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களை கோவில்களில் தங்க வைத்திருப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றை தடுக்கவும் மருந்துகள் உண்டு.

அதேநேரம், அம்மை நோய் தாக்குவதை தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லா தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்க தடுப்பதில்லை.

ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்துமாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.

Work From Home Exercise - Head and Shoulders

Work From Home Exercise -  Head and Shoulders
           
      
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753



Work From Home Exercise -  Head and Shoulders


One to One Share Market Training 
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training