5 வயது வரை குழந்தைகளுக்கான உணவு பட்டியல்

5 வயது வரை குழந்தைகளுக்கான உணவு பட்டியல்
Food-list-for-children-up-to-5-years-old


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

”குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி, மசித்த சாதம், இடியாப்பம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம், வேகவைத்த கேரட், வேகவைத்த ஆப்பிள் எனக் கொடுக்கலாம்.

ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்லை. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு.

”நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 -  3 வகை பருப்புகள், 2 -  3 வகை காய்கள், 2 - 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2  3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும். இப்படியான உணவு… வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்.

பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள்  நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும். பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது. இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும். 

குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?

குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்?
How-many-breastfeeding-baby

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

குழந்தைக்கு ஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில நேரங்களில் 12 முறை வரை கூட சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது இருக்கும். இது இயற்கையானது தான். பொதுவாக, குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் ஊட்ட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது. குழந்தைக்கு பசி இருப்பது தெரியவந்தால் பால் ஊட்ட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை பால் குடிப்பதே போதுமானதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு பல முறை உணவு தேவைப்படும். எனவே, பால் கொடுப்பதில் வரைமுறை எதுவும் இல்லை. சில குழந்தைகள் சில நேரங்களில் பாலை அடிக்கடி துப்பி விடும். இதுவும் இயற்கையானது தான். கவலைப்படத் தேவை இல்லை.

பொதுவாக, பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் எதையும் தரக்கூடாது. 6 மாதத்திற்கு மேல் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உணவுகளைக் கொடுக்கலாம்.

குழந்தை கருப்பாக மலம் கழித்தாலும், குழந்தை சரியான அளவில் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து விட்டு பிறகு தாய்ப்பாலைத் தொடரவும். 

குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள்

குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள்
Symptoms-of-Children-tension.


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.

இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?

* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. 

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?
Childcare-parents-advice


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.

தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.

எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி? என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.

நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.

ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.

தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.

அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.

பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.

அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.

நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.

பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.

காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.

பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.

எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.



ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.

பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை

பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை
Things-to-look-out-for-when-you-punish-children

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

* தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

* தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

* குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

* குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

* குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

* குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

* தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது
parents-teach-toilet-habits-for-children



          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.

குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.

குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.

இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.

குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.

குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.

குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்
mother-and-father-are-the-first-teachers-of-the-children


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
    
குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?

ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?

வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?

வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.

முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.

“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.

“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.

“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.

மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.

இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
parents-advice-to-children

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.

இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.

இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,

* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.

* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.

* கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-accounts-children



            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்களுக்குப் பணம் மேலாண்மை பற்றிய அடிப்படையைக் கற்றுக்கொடுக்கவும் உதவுகின்றன. இத்தகைய வங்கிக் கணக்குகள் மைனர் கணக்குகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் மைனர் என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்? மைனரின் சார்பாக அவரின் காப்பாளர். மைனருடன் கூட்டாகச் சேர்ந்து அவரின் காப்பாளர் மைனரின் சார்பாக அவரின் சட்டப்பூர்வ காப்பாளர். 10 வயதிற்கு மேல் இருக்கும் மைனர் ஆண் அல்லது பெண் , அவரின் பெயரில் அவரால் இயக்கப்படும் ஒரு கணக்கு

படிவம் : வழக்கமான கணக்குத் திறப்புப் படிவம் பூர்த்திச் செய்து, இந்த மைனர் கணக்கை திறக்கலாம். மைனரின் பெயர், முகவரி, பாதுகாவலர் விவரங்கள் மற்றும் கையொப்பம் போன்ற விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஆவணங்கள் : கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மைனரின் பிறப்புச் சான்றிதழ் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கேஒய்சி ஆவணம். இது காப்பாளரின் KYC ஆவணமாக இருக்க வேண்டும். மைனரின் ஆதார் அட்டை. காப்பாளரின் மாதிரி கையொப்பம். 10 வயதிற்கு மேல் உள்ள மைனர் என்றால், அவரின் மாதிரி கையொப்பம்.

கணக்கின் செயல்பாடு: 10 வயதிற்குக் குறைவாக இருக்கும் மைனர், என்றால் அவரின் வங்கிக் கணக்கை அவருடைய காப்பாளர் நிர்வகிக்கலாம் . 10 வயதிற்கு மேல் உள்ள மைனர், அவருடைய வங்கி செயல்பாட்டை அவரே நிர்வகிக்கலாம்.

18 வயதிற்குப் பின்: மைனருக்கு 18 வயது முடிந்தவுடன், அவரின் வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காகக் குறிக்கப்படுகிறது. இனி, காப்பாளர் இவருடைய வங்கிக் கணக்கை நிர்வகிக்க இயலாது. மைனர், மேஜர் ஆனதற்கான சான்றை மற்றொரு கே ஒய் சி படிவத்துடன் இணைத்து வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கவணிக்க வேண்டியது : ஒவ்வொரு வங்கிக் கணக்கின் தினசரி பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் நிர்ணயித்துள்ளன, மற்றும் பெற்றோர்களிடமிருந்தான பரிவர்த்தனை வரம்புகளைச் சரிபார்க்க, சிறார்களின் கணக்குகளில் கூடுதல் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்திருக்கிறது



எந்த வயதில் தியானம் செய்யலாம்?

எந்த வயதில் தியானம் செய்யலாம்?
Meditation-start-age


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். எந்த வயதில் இருந்து தியானம் செய்ய ஆரம்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது.

ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும்.

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்
Documents-required-to-adopt-a-child



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.

தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

* அடையாள அட்டை
* இருப்பிட சான்றிதழ்
* திருமண சான்றிதழ்

* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.

* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).

* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.

* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.

* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.

* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். 

குழந்தைகளின் சேமிக்கும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?

குழந்தைகளின் சேமிக்கும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?
How-to-stimulate-children-saving-interest.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.

குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.


2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்

4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.

6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.

7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்

8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.

குழந்தைகளின் படிப்பை பாதிக்கிறதா ஸ்மார்ட்போன்கள்?

குழந்தைகளின் படிப்பை பாதிக்கிறதா ஸ்மார்ட்போன்கள்?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.

முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.

ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்!

பெற்றோர் குழந்தையின் பயத்தை போக்குவது எப்படி?

பெற்றோர் குழந்தையின் பயத்தை போக்குவது எப்படி?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் பயப்படும் போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும். இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும்.

3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

7. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.

மகளுக்கு தேவை பணமல்ல.. நல்ல வழிகாட்டுதல்..

மகளுக்கு தேவை பணமல்ல.. நல்ல வழிகாட்டுதல்..


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.

காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம்.