தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா !

தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



தடுப்பூசியைப்பற்றிக் கேள்விப் படாத நபர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. தடுப்பூசியில் என்ன இருக்கும்? தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தடுப்பூசி என்பது அந்த நோய்க்கிருமியை அழிக்கும் ஒரு மருந்து இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிக் கிடையாது. தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்குமே தவிர நோய்க்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் இருக்காது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. உதாரணமாக போலியோ சொட்டு மருந்து என்றால் போலியோ வைரஸை உயிருடன் குழந்தைக்கு அனுப்பும் ஒரு முறைதான் போலியோ தடுப்பு சொட்டு மருந்து. அம்மை தடுப்பூசி என்றால் அம்மை நோய்க்கிருமியை சில பிராச° செய்து குழந்தையின் உடலில் அனுப்புவதற்கு அம்மைத் தடுப்பூசி என்று பெயர்.

எனவே தடுப்பூசியில் நிறைய ரகங்கள் உள்ளது. ஒரு சில தடுப்பூசிகள் உயிருடன் கிருமிகளை அனுப்புவார்கள். ஒரு சில இறந்த கிருமிகளையும், ஒரு சில தடுப்பூசியில் பாதி இறந்த மயக்க நிலையில் உள்ள கிருமிகளையும் அனுப்புவார்கள். ஆக தடுப்பூசி என்றால் மருந்து மாத்திரை இருக்காது. நோய்கிருமிதான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆச்சரியமாக இருக்கும். நோய்க்கிருமிகளை உடலில் அனுப்பினால் இதற்குத் தடுப்பூசி என்று எப்படி பெயர் வைக்க முடியும்.

பிறந்த குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ அல்லது எபிசிடி-யோ தெரியாது. தான் ஒரு மனிதன் என்றே ஒரு குழந்தைக்குத் தெரியாது. ஆணா? பெண்ணா? என்றும் அந்த குழந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமியை உடலில் அனுப்புவது என்ன தைரியத்தில் என்று கேட்டால் மனித உடலில் அனைவருக்கும் ஒரு அறிவு உள்ளது. எந்த நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது உடலுக்கு நோய் உண்டு செய்யும் கெட்ட கிருமியா என்று ஆராய்ச்சி செய்யும். நல்ல கிருமிகள் பல ஆயிரக்கணக் கானவை உள்ளன. அவற்றை நம் உடல் ஒன்றும் செய்யாது. உடலுக்கு நோயை ஏற்படுத்தும். கெடுக்கும் நோய்கிருமிகளைக் கண்டுபிடித்து விட்டால் உடலில் உள்ள தைம°ஸ் சுரப்பி, கல்ஙூரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் பல சுரப்பிகளும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரி மருந்து வேண்டும் என்று யோசித்து அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களையும், எந்தவிதத்தில் கலக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும். அதாவது ஒரு பார்முலா தயார் செய்யும்.

பார்முலா என்றால் என்னவென்றால் நமது வீட்டில் ஒரு ரசம் செய்வதற்கு எந்த எந்த பொருட்களை எவ்வளவு கலந்து எப்படி சுடவைத்துத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது அல்லவா? அந்த பார்முலா தெரியாத நபரால் ரசத்தை தயாரிக்க முடியாது. அதுபோல உடலில் உறுப்புகளாகிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு பார்முலாவை எழுதி அந்த பார்முலாவுக்கு தேவைப்படுகிற மூலப்பொருள்களை இரத்தம் என்ற இடத்திற்குச் சென்று எடுத்து வந்து அதை சரியாக கலவை செய்து மருந்தை தயார் செய்து, அந்த மருந்தை நோய்க்கிருமிகள் மேல் செலுத்தி அந்த நோய்க்கிருமியை அழிக்கிறார்கள்.

இப்படி உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே பிறந்த நாள்முதல் நோய்க்கிருமியை அழிக்கும் ஆற்றல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் மட்டுமே உலகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.

தடுப்பு ஊசி என்ற பெயரில் உடலுக்குள் நோய்க்கிருமிகளை உடலுக்குள் அனுப்புகிறார்கள். உடல் அந்த நோய்கிருமி என்றுஅறிமுகப்படுத்தி அதை அழிக்கும் சக்தியை நம் உடல் பழகுவதற்குத்தான் தடுப்பூசி அனுப்பப்படுகிறது.

தடுப்பூசியில் நோய்கிருமிகள்தான் இருக்கும் என்ற விஷயமும், அதுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது என்று உலகத்திலுள்ள எந்த மருத்துவரிடம் கேட்டாலும் சொல்வார்கள். இது பொதுமக்களாகிய நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? இதைக்கூட தெரியாத நமக்கு உடலைப் பற்றியும், மருத்துவத்துறையைப்பற்றியும் வேறு என்ன தெரிந்திருக்க முடியும்.

தடுப்பூசிகள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் மட்டுமே செலுத்துவார்கள். 20 வயது 50 வயது நோய்களுக்கு தடுப்பு ஊசி கொடுக்கப்படுவது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு உடலில் 5 விஷயங்கள் ஒழுங்ககாக இருக்கும். வயதாக வயதாக நம்மில் நம்மிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கத்தினால் அந்த 5ல் ஒன்றோ இரண்டோ கெட்டு விடும். நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கும் பொழுது மட்டுமே ஒரு நோய்க்கிருமியை உடல் அறிவால் அழிக்க முடியும். அப்பொழுது பிறந்த குழந்தைக்கு என்ன இருக்கிறது. இப்போது நம்மிடம் என்ன இல்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமி அனுப்பும்பொழுது அது உடம்பில் நோய்கிருமியை அழித்து விடுகிறது. ஆனால், 20 வயது 50 வயது நபர்களுக்கு நோய்க்கிருமியின் மூலமாக சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற நோய்கள் வருகிறதே இது எதனால் என்று யோசிக்க வேண்டும்.

மனிதனின் உடலுக்கே நோய்கிருமியை அழிக்கும் சக்தி இருந்தால், எனக்கு ஏன் சிக்கன் குன்யா போன்ற நோய்கிருமிகள் வருகிறது என்ற சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும். அதற்குக் காரணம், சிறு வயதில் நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கிறது. இப்பொழுது 5 விஷயங்களில் ஏதோ ஒன்றோ இரண்டோ ஒழுங்காக இல்லை. எனவே, நோய்கிருமியினால் ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதில்லை. நம் உடலில் ஏதோ ஒன்று குறைபடுவதால் அந்த மருந்தைத் தயாரிக்கும் முறையில் சில சிக்கல்கள் ஏற்படுவதால் அந்த நோய்க்கிருமியை அழிக்க முடியாமல் நம் உடல் தடுமாறுகிறது. எனவே, தவறு நோய் கிருமிகள் மேல் இல்லை. நமது உடலில் உள்ள சில விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதை சரிப்படுத்துவது எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் நாம் நோய்கிருமியை பார்த்து பயப்படத் தேவையில்லை.

உடலை அம்மாவாகவும், இரத்தத்தை சமையலறையாகவும் இரத்தத்தில் உள்ள பொருள்களை சமையல் அறையில் உள்ள பொருளாகவும், ரசத்தை ஒரு நோய்கிருமிக்கான மருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். சமையலறையில் ரசத்திற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப்போன பொருளாக இருந்தால் அதை வைத்து ரசம் செய்யும்பொழுது அந்த ரசத்தை நாம் சாப்பிட முடியாது. அதுபோல ஒருவருக்கு ஒரு நோய்க்கிருமி உடலில் நுழையும்பொழுது அதை அழிக்கத் தயாரிக்க தேவையான ஒரு பொருள் நமது இரத்தத்தில் கெட்டுப்போய் இருந்தால் அந்த மருந்தால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. இதனால் நமக்கு அந்த நோய்கிருமியை அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இது முதலாவது காரணம்.

இப்பொழுது கூறுங்கள். நோய்கிருமியால் நோய் வந்ததா? அல்லது நம் இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்ததால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் தரம் குறைந்த பொருளைத் தரம் சரி செய்வது எப்படி? என்பதை நாம் கற்றுக் கொள்ள போகிறோம். எனவே இனி நாம் நோய்க்கிருமியை அழிப்பதற்கு மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் இரண்டு. ஒரு வேளை சமையலறையில் ரசம் தயாரிக்க ஒரு பொருள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரசத்தில் ஒரு பொருள் இல்லாமல் உருவாக்கினால் அதை யாரும் சாப்பிட முடியாது. அதேபோல் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க தேவைப்படும் ஒரு பொருள் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ நம் உடலால் அந்த குறிப்பிட்ட மருந்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோய்க்கிருமி அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இப்பொழுது சொல்லுங்கள் நோய்கிருமியால் நோய் வந்ததா? இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் அல்லது குறைந்து இருப்பதால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் இரத்தத்தில் இல்லாமல் போன பொருளை வைப்பதற்கும், குறைந்த பொருளை சரிசெய்வதற்கும் சில எளிய முறைகள் உள்ளன. அதை நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். அதை கற்றுக்கொண்டு ஒழுங்கு படுத்தினால் நோய்கிருமிகளிலிருந்து நம் உடலை நாம் காப்பாற்றலாம்.

மூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதனுடைய உடலிலுள்ள உயரம், எடை, வயதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உள்ளது. 4 லிட்டர் 5 லிட்டர் என நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதன் அளவு குறையும் பொழுது நோய்க்கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தை நம் உடல் செய்யாது. எனவே இரத்தத்தின் அளவு குறைவதால் தான் நோய் வருகிறதே தவிர, நோய்கிருமியால் அல்ல என்பதை புரிந்து கொண்டு இரத்தத்தின் அளவை சரியாக வைத்துக்கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். எனவே நாம் நோயிலிருந்து விடுபடலாம்.

நான்காவது காரணம். நமது மனம் கெட்டுப்போனால், நோய்க்கிருமியை அழிக்க முடியாது. நமது மனதிற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் மனம் எதைப்பற்றி யோசிக்கிறதோ, உடல் அதைச் செய்யும். ஒரு உடலுக்கு நோய்க்கிருமியால் ஒரு காய்ச்சல் வந்தவுடன் நமது மனம் நமக்கு நோய் வந்து விட்டது பயமாக இருக்கிறது. இதை மருந்து மாத்திரையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று நினைத்தால், உடல் உங்கள் நோயை குணப்படுத்தாது. என் உடலுக்கு அறிவுள்ளது அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று மனதில் பயமில்லாமல் தைரியமாக இருந்தால் மட்டுமே நம் உடல் நம் நோயை குணப்படுத்த முடியும்.

 நீங்கள் பார்த்திருக்கலாம் பலர் பல சந்தோஷமாக அமர்ந்திருக்கும்பொது அந்த உணவில் பல்லி விழுந்து விட்டது என்று யாராவது சொன்னால் அடுத்த வினாடி வாந்தி வருகிறது. உணவில் பல்லி விழுந்தது என்று தெரியாதவரை ஜீரணம் செய்து கொண்டிருந்த வயிறு இப்போது ஏன் வாந்தி எடுத்தது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மனம் நினைத்தால் ஜீரணம் செய்யும் வயிற்றை நிறுத்தி வாந்தி எடுக்க வைக்கும். எனவே, மனதில் ஒரு நோய் வந்தவுடன் பயம் ஏற்பட்டால் அந்த நோயை உடல் குணப்படுத்தாது. இது நான்காவது காரணம்.

நமது உடலில் அறிவு உள்ளது. அந்த அறிவுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது. அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அது கெட்டுப் போகும் பொழுதும் நமக்கு நோய்க்கிருமியால் நோய் வரும். இது ஐந்தாவது காரணம்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால் நோய்க்கிருமியால் உடலுக்கு நோய் வருவதில்லை. நம் உடலில் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதால், இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் போவதால் அல்லது குறைந்து போவதால், இரத்தத்தின் அளவு குறைவதால், மனது கெட்டுப் போவதால், உடல் அறிவு கெட்டுப் போவதால் மட்டுமே நமக்கு நோய் வரும்.
எனவே ஒருவருக்கு நோய்கிருமியால் எந்த நோயும் வரவில்லையென்றால் அவ்வுடலில் இந்த 5 விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறது என்று பொருள். ஒருவருக்கு நோய்க்கிருமியால் நோய் வந்து விட்டது என்றால் ஐந்தில் ஒன்றோ, இரண்டோ அல்லது பல விஷயங்கள் கெட்டுப் போய்விட்டது என்று பொருள்.

நோய்க்கிருமியால்தான் நோய் வருகிறது என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோய்க்கிருமியால் நோய் வருகிறது என்றால், மருத்துவர்களுக்குத்தான் அதிகமாக நோய் வரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள்தான் தினமும் மருத்துவமனையில் பல கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் உடலிலிருந்து வரும் காற்றின் மூலமாக, அவர்கள் தொடும் பொருள்களின் மூலமாக அந்தக் கிருமிகள் பரவுகிறது. ஏன் மருத்துவர்களுக்கு மட்டும் அந்த நோய் வரவில்லை.

நோய்கிருமியால்தான் நோய் வருகிறது என்பது உண்மையானால் ஒரு ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரே நோய் வரவேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் பத்து நபர்கள் இருந்தால் எட்டு நபர்களுக்கு வரும் நோய் அந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

அந்த இருவருக்கும் இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கும். எனவே உலகிலுள்ள பலவிதமான நோய் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கு பெயர் வைத்து அந்த நோய்கிருமிகளை பெரிய மனிதர்களாக ஆக்குவதை விட்டுவிட்டு நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களையும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சிறிய ரகசியங்களை புரிந்து கொண்டு அதை சரி செய்துவிட்டால் எந்த நோய்க் கிருமியாலும் எந்த நோயும் வராது.

நோய்க்கிருமி என்றால் என்ன? அது என்ன வடிவத்தில் இருக்கும்? என்ன அளவில் இருக்கும் என்று தெரியாத பலர் இந்த நோய்கிருமியைப்பார்த்து பயப்படுவார்கள். பல கிருமிகள் நம் கண்ணிற்கே தெரியாது. இதுவரை யாரும் மைக்ரா°கோப் மூலமாக கூட யாரும் பார்த்தது கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் பலகோடிக் கணக்கான நோய் கிருமிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், நாம் விடும் மூச்சுக்காற்றின் வழியாக பல கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை நம் உடலுக்குள் சென்று வெளியே அனுப்புகிறோம்.

எனவே தயவு செய்து நோய்க்கிருமியைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கு எந்த நோய்க்கிருமியாலும் எந்த நோயும் வராது. அப்படி வந்தாலும் காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இந்த புத்தகத்தில் விரிவாக கூறியிருப்போம். அதைமட்டும் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால் எந்த மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவரின் உதவி இல்லாமலே நாம் நோய்க்கிருமியை வெல்ல முடியும்.

எனவே, தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்கும். பிறந்த குழந்தைக்கு மிகச்சிறந்த தடுப்பூசி குழந்தையின் அம்மாவின் தாய்ப்பால்தான். தாய்ப்பால்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பூசி. ஒரு அம்மா தன்னுடைய வாழ்நாளில் மற்றும் அவருடைய பரம்பரையில் உள்ள அனைத்து நோய்களையும் எப்படி குணம் செய்தார் என்ற ரகசிய பார்முலாவை தாய்ப்பாலின் வழியாக தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு முதல் 3 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வேறு எந்த தடுப்பூசியும், மருந்து மாத்திரையும், லேகியமும் கொடுக்காமல் வளர்த்தால் உலகிலேயே அந்த குழந்தைபோல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தை வேறு எந்தக் குழந்தையும் இருக்காது.

இப்படிப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி என்ற பெயரில் ஒரு நோய்க் கிருமியை உள்ளே அனுப்பும்பொழுது அந்த குழந்தையின் உடல் தாய்ப்பாலின் மூலமாக வரும் பலகோடிக்கணக்கான அறிவை சேர்த்து வைக்காமல் இந்த தடுப்பூசியில் உள்ள நோய்க்கிருமியை பார்த்து பயந்து இந்த நோய்க் கிருமிகளுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. எனவே, தடுப்பூசி போட்ட அந்த நோய்க்கு மட்டும் பாதுகாப்பாக இருக்குமே தவிர, வேறு எந்த நோய் வரும்பொழுது பயப்பட ஆரம்பிக்கிறது. எனவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவு செய்யுமே தவிர அதிகப்படுத்தாது.

தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி எப்படி உருவாயிற்று? பல நூற்றாண்டுகளாக இந்தத் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப் பட்டது?. எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்?. தடுப்பூசியைத் தடை செய்வதற்கு அது சம்பந்தமான ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு இயக்கம் தோற்றப்பட்டது எப்பொழுது? இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன? தடுப்பூசி என்பது தேவையில்லாத ஒன்று என்பதை இயற்கை வைத்தியம் என்ற தமிழ்வாணன் ஐயா எழுதிய புத்தகத்தை தயவு செய்து படித்துப்பாருங்கள். அதில் முதல் 200 பக்கங்களில் இந்த தடுப்பூசி பற்றி தெளிவாக கூறியிருப்பார்.

தடுப்பூசி என்பது நோய்க் கிருமியை உடலுக்குள் அனுப்பும் ஒருமுறை. உடல் நோய்க்கிருமியை பார்த்த அடுத்த வினாடி, ஹெல்பர், கில்லர், சப்ர°ஸர், மெம்மரி என்ற நான்கு காரியத்தை செய்யும். ஹெல்பர் என்றால் சளி. முதலில் சளியை உண்டு செய்து அந்த நோய்கிருமியை சளி மூலமாக வெளியேற்றும். சளி என்பது நோய்க்கிருமியை வெளியேற்றும் ஒரு வாகனம். எனவேதான், தண்ணீரை மாற்றிக் குடிக்கும்பொழுது சளிப் பிடிக்கிறது. இது ஏன் என்பதை தண்ணீர் அருந்தும் முறை என்ற தலைப்பில் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க உள்ளோம். ஒரு நோய்க்கிருமியை ஹெல்பர் என்ற சளியால் வெளியே அனுப்ப முடிந்துவிட்டால் அத்துடன் உடல் சமாதானம் அடைகிறது.

ஒரு சில நோய்க்கிருமிகள் சளிக்கு வெளியே செல்லாமல் சளியை இழுத்துக்கொண்டு உடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிடும். அப்பொழுது கில்லர் என்ற ஒரு மருந்தை நமது உடல் தயார் செய்து அந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. இந்த கில்லர் என்ற மருந்து ஒரு புரோட்டீன் ஆகும். இம்மருந்து நோய்கிருமியை அளித்த உடல் அந்த கில்லர் என்ற மருந்தை அழிப்பதற்காக சப்ர°ஸர் என்ற ஒரு மருந்தை உடன் தயார் செய்கிறது. இந்த சப்ர°ஸர் என்ற மருந்து கில்லர் என்ற மருந்தை வீரியமிழக்கச் செய்கிறது. இப்படி சளி, நோய்க்கிருமியை அழிக்கும் மருந்து, மருந்தை சமாதானப்படுத்தும் மருந்து என 3 மருந்துகளை அது அனுப்பி நான்காவதாக நமது உடலில் உள்ள செல்களில் நான் ஒரு நோய்க்கிருமியை பார்த்தேன். அந்த நோய்க்கிருமியின் வீரியம் இவ்வளவு, அதை அழிப்பதற்காக நான் இந்த மருந்துகளை அனுப்பினேன், அதன் மூலமாக அந்த நோய்க்கிருமி இறந்து விட்டது, சக்ஸ°, என்று அந்த பார்முலாவை பதிவு செய்வது மெம்மரி என்ற அறிவு. இப்படி ஒவ்வொரு நோய்க்கிருமியும் உடலுக்குள் போகும்பொழுது இந்த நான்கு முறையில் நான்கு விதமாக நமது உடல் அறிவு வேலை செய்து நோய்க்கிருமியை அழிக்கிறது.

மன்னிப்பு - பற்றி மருத்துவ ஆராய்ச்சிகள்

மன்னிப்பு  - பற்றி  மருத்துவ ஆராய்ச்சிகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

*மன்னித்து மகான் ஆகுங்கள்*

டீன் ஏஜ் மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ! அப்பாவா !

டீன் ஏஜ் மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ! அப்பாவா !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பாதான் !

உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் !

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் !தன்னம்பிக்கை வளர்ப்பவர் !

நம்பிக்கை ஊட்டுபவர் !பண்புகளை ஊட்டுபவர் ! வழிகாட்டி !

என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே?

அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.

எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி,
பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி
ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.
எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.

மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.

திடீரென ஒரு நாள் பார்த்தால்,சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒண்ணும் தெரியாது"என்று பல்டி அடிப்பாள்.

எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல்,மன மாற்றங்கள்தான் !

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள் !

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ! உங்கள் மகள் உங்கள் மகள்தான் !

உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.

ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில்தான் மாற்றங்கள் !
"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி"என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....எனக்கு இது வேணும்.முடியுமா முடியாதா?"என பிடிவாதம் பிடிப்பாள்.

உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.

நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.

"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்"எனும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.*

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.
அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ,
செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.
ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.
மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.
நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
அவள் பள்ளியிலோ,கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.
வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள் !

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல்,உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு
அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
சக தோழிகளின் கிண்டல்,படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். *"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி,உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும்,ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது"எனும் நிலமை வந்தால் சிக்கல் தான்.

அவளுடைய படிப்பு,நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.

🗣குறிப்பாக ஆண்களைப் பற்றியும்,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்,

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்"எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.~
"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"
எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.
"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்"எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்!

இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்...

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அதிகத் தாமதமாவதற்கு முன் உங்கள் பிள்ளைகளுக்குப் பண விஷயங்களைப் பற்றி இப்போதே கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நிதிகளை நிர்வகிப்பதற்கான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்கள் சுயமாக வாழத் தொடங்குவதற்கு எந்த ஒரு பெற்றோர்களும் விரும்பமாட்டார்கள்.

சரி பிள்ளைகளுக்குப் பணம் குறித்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வயது வரம்பு ஏதேனும் உள்ளதா..? என்றால் சத்தியமாக இல்லை, இதுவும் இன்றைய போட்டி மிகுந்த காலத்தில் இல்லவேஇல்லை. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுப்பது போலவே நிதி, பணம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்த முயற்சி பெற்றோர்களுக்கு உதவும். அப்படிப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 பணம் குறித்த புரிதல் அல்லது பாடத்தையே இப்போது பார்க்கப்போகிறோம்.

பண அணுகுமுறை
நீங்கள் ஒவ்வொரு நிதி முடிவிற்கும் தகுதியைக் கருத்தில் கொள்ளும் மற்றும் மிகுந்த நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் வகை நபராக இருந்தால், உங்கள் பிள்ளைகளும் உங்களது அணுகுமுறையைப் பற்றிக் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம்.

உங்கள் பணப் பழக்க வழக்கங்களைக் குடும்பத்தோடு அமர்ந்து சிந்தியுங்கள், எனவே நீங்கள் கல்லூரிக்கு அனுப்பிய உங்கள் பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

பணம் மரத்தில் காய்ப்பதில்லை
ஆரம்பத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரே பணப் பாடம் என்னவென்றால், உங்களிடம் ஏராளமான பணம் இருந்தாலும் கூட அதற்கு மாற்றுப் பயன்பாடுகள் எப்பொழுதும் இருந்து வருகின்றன.

ஒரு மாதாந்திர படித்தொகைக்கு ஒப்புக்கொண்டு அதைக் கடைப்பிடிக்கவும். புத்தகங்கள், உறுப்பினர் சந்தா, பயணம் மற்றும் இதர பெரிய டிக்கெட் பொருட்கள் போன்ற அனைத்து இதர செலவுகளைப் பற்றியும் உங்களுக்கு நல்ல யோசனை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் அவற்றிற்கு முன்கூட்டியே பணத்தை வழங்கிவிடுங்கள்.

பட்ஜெட்டை தயாரிப்பு
வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குடும்பக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் எதற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை உங்கள் குழந்தைகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கட்டாய மற்றும் விருப்பச் செலவுகள் உட்பட வாழ்க்கைச் செலவுகளை மதிப்பீடு செய்வதை ஒரு நடைமுறை பயிற்சியாக மேற்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை இதர சிறிய ஆடம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், பகுதி நேர வேலைகளை எடுத்துச் செய்யுமாறு பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.

நிதிப் பரிமாற்றங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எப்படி மின்னணு பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும், எப்படி வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மின்னணு வாலட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் மற்றும் ரொக்கப் பணப் பயன்பாட்டை எவ்வாறு குறைக்கலாம், அதன் மூலம் கணக்கு வைப்பு எவ்வாறு எளிதாகிறது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். கணக்கு வழக்குகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேளுங்கள்.

கண்காணிப்பு மற்றும் கவனிப்பு
அவர்களுடைய பணப் பழக்க வழக்கங்கள் அவர்களுடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும் மேலும் அது ஒரு குழுவில் பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நிகழும் என்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவுப்படுத்துங்கள். செலவுகளைச் சமமாகப் பிரிப்பது சிறந்தது என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். நண்பர்களுக்குக் கடன் கொடுப்பதென்றால் கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று சொல்லுங்கள்.

காலம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள்
ஒரு குறிப்பிட்ட தேதியை அமைத்து, அந்தத் தேதிக்குள் வாக்குறுதி அளித்தபடி பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் பணம் வரவில் வைக்கப்படும் தேதி வரை காத்திருக்கவும் அதைக் கொண்டு தங்களைச் சிறப்பாக நிர்வகித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். அவசர நெருக்கடி கால நிலைகளுக்காக ஒரு வரையறுக்கப்பட்ட தொகையைச் செலுத்தி அதை அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே விட்டு வையுங்கள்.

பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள்
பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள், கிரெடிட் கார்டை பயன்படுத்துதல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படை விதிமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். டெபிட் கார்டுகள் தொலைந்து விட்டாலோ அல்லது அவை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு
உங்கள் பிள்ளைகளை முதல் அல்லது இரண்டாம் கணக்குதாரராகக் கொண்ட வீட்டிற்கான பின்னணியைக் கொண்ட முதலீடுகள் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் 18 வயதை அடைந்த பிறகு அந்தக் கணக்குகளை உங்களால் அணுக முடியாது. அவர்கள் வீட்டை விட்டு படிப்பிற்காகவோ வேலைக்காகவோ வெளியிடங்களுக்குச் செல்லும் முன் அத்தகைய வங்கிக் கணக்குகளைச் சிறியவர்களுக்கான வங்கிக் கணக்கிலிருந்து பெரியவர்களுக்கான வங்கிக் கணக்காக மாற்றி விடுங்கள். அவர்களுடைய கையொப்பங்கள் வங்கிகளால் உண்மையானதெனச் சான்றொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதி சுதந்திரம்


காலப்போக்கில் நீங்கள் அவர்களுடைய நிதி சார்ந்த விஷயங்களிலிருந்து விலகி நிற்பீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொள்ளவோ அல்லது அதை மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலோ அதிகப்படியான ஆர்வத்துடன் இருக்காதீர்கள். அவர்கள் கடுமையாக உழைத்துப் பெற்ற நிதி சுதந்திரத்தை அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க அனுமதியுங்கள்.