காதலியின் பெற்றோரை சந்திக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

காதலியின் பெற்றோரை சந்திக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.

காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.

பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருமணம் செய்யும் ஆண், நல்லவராக இருக்க வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மகளின் காதலன் மீது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தையே வைத்திருப்பார்கள். இதனால், பெண்ணின் பெற்றோர் உடனான முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் அவர்களை எப்படி கவர்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்காக அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அது முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும்

உங்கள் டிரசிங் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு அம்சம். அதனால், முடிந்த வரை நேர்த்தியான உடையில் அவர்களை சந்திக்கவும்.

உணவு உண்ணும் போது முடிந்த வரையில் மிகவும் பொறுமையாக, நாகரீகமாகவும் உணவு உட்கொள்ளவும்.

அதிகமாக உணவு உட்கொள்வது உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் காண செய்யும். குறைந்தளவு மட்டும் உண்பது உங்களை கூச்ச உணர்வு கொண்டவராகக் காட்டும்.

பெற்றோரின் முன் அவர்களின் மகளை மரியாதையுடன் நடத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.

உங்கள் காதலியின் பெற்றோருடன் பேசி முடித்தவுடன், அங்கிருந்து சரியான நேரத்தில் கிளம்பவும். அவர்களின் நேரத்தை வீணடிக்கவோ அல்லது அங்கிருந்து அவர்களே கிளம்ப வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டாம்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.

`மற்றவர்களை மரியாதையாக நடத்துவதும், நம்மையறியாமல் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கேட்பதும்தான் மனிதத்தன்மை. இதில் பெற்றோர், பிள்ளைகள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே `பெத்தப் பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்பதா' என்கிற ஈகோ காணாமல் போய்விடும். இப்படி ஈகோ இல்லாத பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் தாங்களும் அப்படியே வளர்வார்கள். அடுத்தது, ஒரு தடவை மன்னிப்புக் கேட்டபிறகு, அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது என்பதிலும் பெற்றோர்களாகிய நாம்தாம் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

`அம்மாவும் அப்பாவும் தப்புப் பண்ணிட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறாங்க' என்கிற எண்ணம் உங்கள் குழந்தைகளின் மனதில் பதிய பதிய காலப்போக்கில் அந்த உணர்வானது அன்பாகி, மரியாதையாகி, பக்தியாக மாறும். பெற்றவர்கள்மீது பக்தி செய்கிற பிள்ளைகள், வளர்ந்தபிறகு பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டது என்று நினைத்து அவனை/அவளை அடித்து விடுகிறீர்கள். பிறகு, பிள்ளைமீது தவறு இல்லை என்பது தெரிந்து அவனிடம்/அவளிடம் மன்னிப்புக் கேட்பது ஒருவகை. இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. அதாவது, பிள்ளை நிஜமாகவே தப்பு செய்துவிட்டது. அதனால் பிள்ளையை அடித்து விட்டீர்கள். இதன் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் நிதானமானதும், பிள்ளையிடம் பேசுங்கள்.

`நீ இப்படித் தப்பு செய்ததால் அம்மாவுக்குக் கோபம் வந்து அடித்து விட்டேன். ஆனால், நான் அடித்ததற்கு `ஸாரி' என்று கேட்டு விடுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், `யாராவது தவறு செய்தால் அவர்களை அடித்தும் திருத்தலாம் போல' என்கிற பாடம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவே கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு. கூடவே, செய்த தவற்றை மறுபடியும் பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைப்பதும் உங்கள் கடமை.

கடைசியாக ஒரு விஷயம், பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.